இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர்[1]. பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளை குறிக்கும். பறவைகள்[2] இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள்
கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே
இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும்
வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள்
கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.[3]

அறிமுகம்
மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ அல்லது இரண்டேகால் அங்குலம்) 1.8 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை தாரிச்சிட்டு(ஓசனிச்சிட்டு) களிலிருந்து, 9 அடி உயரமும் 156 கிலோகிராம் எடையும் கொண்ட (பறக்காத) பெரிய தீக்கோழி மற்றும் ஈமியூ வரை, பறவைகள் பல பரும அளவுகளிலும் உள்ளன. அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான 'கானல் மயில்'
(Great Indian Bustard) 18 கிலோ வரை பெருக்கும். பறவைகளில் மணிக்கு 160
கி.மீ விரைவில் பறக்கும் இனமும் உண்டு. நிலம், நீர் வானம் இவற்றில்
விரைந்து நகரக்கூடிய விலங்கினங்கள் யாவற்றினும் மிக விரைந்து
செல்லக்கூடியது பறவையினத்தைச் சேர்ந்த பொரி லகுடு (அ) அலையும் வல்லூறு(Falco peregrinus) என்னும் பறவையே. சில பறவைகள் நெடுந்தொலைவு ( 17,000 கி.மீ வரை) செல்லவல்லது
பல பறவைகள், பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும்,
சில பறவைகள் பறக்க முடியாதவையாகும். மற்றும் பல இனங்கள், குறிப்பாக
தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன. பறக்கமுடியாத பறவைகளுள், பென்குயின்கள், தீக்கோழிகள், நியூசிலாந்தின் கிவிகள், அழிந்துபோன டோடோக்கள்
என்பன அடங்குகின்றன. பாலூட்டிகள் இன்மை அல்லது குறைவு என்ற சூழலில்
(நியூசிலாந்து முன்பிருந்தது போன்ற சூழலில்) பறவைகள் பாலூட்டிகளின்
சூழற்கூறை நிரப்பத்துவங்குகின்றன. இந்தப்படிமலர்ச்சியின்போது பறக்கும்
தன்மையை அவை விடுக்கக்கூடும். மனிதர்கள் அல்லது மனிதர்களால்
அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள் பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள்
வரும்போது, இப்பறவைகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகுதி. பெரிய ஓக், பறக்கமுடியாத ரெய்ல் எனப்படும் ரால்லிடேக்கள் (Rallidae) கள், நியூசிலாந்தின் மோவாக்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (Mammals) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான தன் உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன (Reptiles) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

பறவையின் புற உறுப்புகளும் அமைப்பும்:1 அலகு, 2 தலை, 3 பாப்பா (கருவிழி)
(Iris), 4 கண்மணி(Pupil), 5 Mantle, 6 புன் முன்னிறகு (Lesser coverts) 7
தோளிறகு (Scapulars), 8 நடு முன்னிறகு (Median coverts), 9
(துணையிறகு)Tertials, 10 பின்புறம் (Rump), 11 பறக்கும் இறகு (Primaries),
12 கழிவாய் (Vent), 13 தொடை (Thigh),
14 முட்டு (Tibio-tarsal
articulation), 15 அடிக்கால் (Tarsus), 16 அடி (பாதம்) ,
17 முன்னங்கால்
(Tibia), 18 வயிறு (Belly), 19 பக்கம் (Flanks), 20 மார்பு (Breast),
21
கழுத்து (Throat), 22 அதள் (அல்) மணி (Wattle)
சிறகுகள்
பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் 'கெரோட்டின்'.
நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின், ஆனால் நமது
தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன்
நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது
சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான
ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற 'ஏரோடைனமிக்'
மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு
சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து
பறவைகளைக் காக்கிறது.
கண்கள்
பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையது. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப்
போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர
பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது
ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.
காது
பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே
அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துளை இருக்கும். பெரும்பாலும்
சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக
மட்டுமல்லாமல் பறக்கும் போது ஈடான உடல் நிலைக்காகவும் தேவைப்படுகிறது.
மூளை
பறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப்
போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக
உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின்
அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள
சிந்திக்கும் பகுதியான பெருமூளைப் புறணி (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் மாந்தர்களுக்கும், பிற பாலூட்டிகளுக்கும் இல்லாத மீயடுக்கு மூளை
(Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. பொதுவாக
அறிவுத்திறனுக்கு உதவுவதாகக் கருதும் பெருமூளைப் புறணிக்கு மாறாக பறவைகளில்
இந்த மீயடுக்கு மூளை இத்திறமைக்கு உறைவிடமாக இருக்கக்கூடும் எனக்
கருதுகின்றனர், ஏனெனில் அறிவுத்திறம் கொண்டாதாகக் கருதப்படும் பறவைகளில்
இப்பகுதி பெரிதாக இருக்கின்றது. இந்தப் பகுதியே பாடும் பறவைகள்
பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும்
இதுவே காரணமாக இருக்கலாமென்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
அலகு
பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்
பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம்பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற ஊன்தின்னிப் பறவைகளூக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல இரையை பிடித்துக் கொள்ள வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கு உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு.
இரை
பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், தின்னவுமே
செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில்
உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி தின்பது
அவசியமாகிறது.
பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை போன்றன இரண்டையுமே தின்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். காட்டாக, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே தின்னும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், செல்பிஷ்
போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை
தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன. இவை
வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச்
செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
உறக்கம்
இரவில் வேட்டையாடும் ஆந்தை
போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில்
உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது.
மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த
இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம்
தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை
தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது.
இணை
பெரும்பாலான பறவைகள் வாழ்நாளில் அல்லது குறைந்தது ஒரு
கூடல்காலத்திற்காவது ஒரே இணையுடன் வாழ்பவை. வழக்கம் போல் இதிலும் சில
விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப்
பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான்
பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை
அசத்துகின்றன.
ஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஓர் ஆண்டு தாண்டி உயிர் வாழ்கிறது.
இடப்பெயர்ச்சி
முதன்மைக் கட்டுரை: வலசை போதல்
உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிகவும் குளிர்
கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்த இடப்பெயர்ச்சி
செய்கின்றன. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில்
32,000 கிமீ வரை) பயணிக்கின்றன.
இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் சூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கின்றன.
பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது 'V' போன்ற வடிவத்தில் பறப்பதைப்
பார்த்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற
எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும்
காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது.
தனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத (முன்துய்ப்பில்லாத) சில இளம்
பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம்.
படிமலர்ச்சி
விஞ்ஞானிகள் தொன்மாக்களிலிலிருந்து
பறவைகள் தோன்றினவா என்று ஆய்ந்திருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான
தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும்,
அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாரின் மரபுவழி முன்னோடி) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். பறவைகளின் படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) பற்றிய ஆய்வுகளில் தொல்லுயிர் படிவங்கள் பெரிதும் துணையாயிருக்கின்றன. இவற்றுள் 1861-ம் ஆண்டு செருமனியிலுள்ள பவேரியாவில் ஒரு சுண்ணாம்புக் காளவாயில் கிடைத்த புதைபடிவம் குறிப்பிடத்தக்கது. அது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வா்ழ்ந்த தொல்சிறகி (Archeopteryx)
என்ற பறவையினுடையது. வாயில் பற்கள், அசைக்கத்தக்க மூன்று விரல்கள்,
சிறகில் நகங்கள் என மரக்கிளைகளில் தொற்றித்தாவும் வசதிகளையும் பெற்றிருந்த
அவ்விலங்கு தொன்மாக்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் இடைப்பட்ட
படிமலர்ச்சிநிலையில் இருந்திருக்கக் கூடும்.[4]
பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள்
மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும்,
நிலத்திலிருந்து இரைக்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி
பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.
இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும் 'க்ரெடாசியஸ்' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் ஆண்டுகள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன.
பறவை இனங்கள் [5]
- முக்குளிப்பான் வரிசை- Order Podicipediformes
- கூழைக்கடா வரிசை- Order Pelecaniformes
- நாரை வரிசை - Order Ciconiformes
- வாத்து வரிசை - Order Anseriformes
- வைரி வரிசை - Order Falconiformes
- கோழி வரிசை - Order Galliformes
- உள்ளான் வரிசை - Order Charadmiiformes
- புறா வரிசை - Order Columbiformes
- கிளி வரிசை - Order Psittaciformes
- குயில் வரிசை - Order Cuculiformes
- ஆந்தை வரிசை - Order Strigiformes
- சாவுக்குருவி வரிசை - Order Caprimulgiformes
- முன்னி வௌவால் வரிசை - Order Apodiformes
மனிதனும் பறவைகளும்
பண்டைக்காலம் தொட்டே பறவைகள் கடவுளாக வணங்கப்பட்டும் கடவுளரின் ஊர்தியாக உருவகப்படுத்தப் பட்டும் வந்துள்ளன. மேலும் கோழி, வாத்து போன்ற பறவைகள் மனிதனுக்கு உணவாகவும் பயன்படுகின்றன.
வலசை போதல்
வலசை போதல் (Animal migration) என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன.[1] குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசை போதல்
எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும்
உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன.

பறவைக் கூட்டமொன்றின் இலையுதிர்காலப் புலப்பெயர்வு

பறவைகள் கூட்டமாக இடம்பெயர்தல்
பறவைகள் வலசை போதல்
இது பறவைகள் புலப்பெயர்வு எனப்படுகின்றது. இவ்வாறு புலம்பெயரும்
பறவைகள் இதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல்
பொழுது குறையும் காலங்களில் உணவு
கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான
தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத்
தயார்படுத்திக் கொள்கின்றன. இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன[2] சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள் கூடப்பார்க்கின்றன.[2] பிறகு, ஒருநாள் ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்லத் துவங்குகின்றன.
இடம் பெயரும் பறவைகள் இருவிதமான நேர் உணர்வைப் பெற்றுள்ளன. ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது, மேலும் அவை புவிக் காந்தப்புலத்தைச் சார்ந்தது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தீர்க்கரேகைகள் புவி காந்தப் புலத் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுவதில்லை.
இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக்கொண்டு வசந்த காலத்திலும் இடப்பெயர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகளின் படி கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன் இரு அச்சு வான் பயணமுறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இடம் பெயரும் பறவைகள் இருவிதமான நேர் உணர்வைப் பெற்றுள்ளன. ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது, மேலும் அவை புவிக் காந்தப்புலத்தைச் சார்ந்தது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தீர்க்கரேகைகள் புவி காந்தப் புலத் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுவதில்லை.
இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக்கொண்டு வசந்த காலத்திலும் இடப்பெயர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகளின் படி கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன் இரு அச்சு வான் பயணமுறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நீண்டதூரத் தரைப் பறவைகள் புலப்பெயர்வு

நீண்ட தூரம் பறவைகள் இடப்பெயர்வைக் காட்டும் படம்

புலம் பெயர் பறவைகளின் வழித்தடங்கள்.
பல வகையான தரைப் புலம்பெயர் பறவைகள் மிக நீண்ட தூரங்கள் இடம் பெயருகின்றன. இனப்பெருக்கக் காலத்தை மிதவெப்பப் பகுதிகளில் அல்லது ஆர்க்டிக் வட அரைக்கோளத்தில் கழிக்கின்ற பறவைகள், மற்றக் காலங்களில் வெப்ப வலயங்களை (tropics) அல்லது தென் அரைக்கோளத்திலுள்ள மிதவெப்ப வலயப் (temperate zones) பகுதிகளை நாடிச் செல்வதே மிகவும் பொதுவாகக் காணப்படும் புலப்பெயர்வு ஆகும். சான்றாக வடக்கு ஐரோப்பாவிலுள்ள குருவிகள், ஆப்பிரிக்காவிலுள்ள
குளிர்கால இடங்களை நோக்கி 6,800 மைல்கள்(11000கி.மீ) அல்லது அதற்கு
அதிகமாகப் பறந்து செல்கின்றன. இவைகள் தங்களுக்குள் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன்
ஒன்று மோதாமலும், சரியான இடைவெளியுடனும், ஒரு குறிப்பிட்ட வேகத்துடனும்
பறந்து செல்கின்றன.
வட பிரதேசக் கோடை காலத்தின் நீண்ட பகற்காலம், புதிதாகப் பொரித்த
குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதற்கான அதிக வாய்ப்புக்களைக் கொண்டது.
இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும். இலையுதிர்
காலத்தில் பகற்காலம் சுருங்கி, உணவு
கிடைப்பதும் அரிதாகும்போது பறவைகள் வெப்பப் பகுதிகளுக்கு வருகின்றன. இப்
பகுதிகளில் பருவகாலங்களைப் பொறுத்து, உணவு கிடைப்பதில் அதிக மாற்றம்
இருப்பதில்லை. இவ்வாறு புலம்பெயர்வதால் கிடைக்கும் நன்மைகள், களைப்பு,
சக்திச் செலவு, புலப்பெயர்வின்போது ஏற்படும் ஆபத்துக்கள் என்பன போன்ற பாதக
அம்சங்களை ஈடுசெய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
புலப்பெயர்வு நடவடிக்கைகள்
புலப்பெயர்வுக்கு முந்திய காலப்பகுதியில், பல பறவைகளில் அதிகரித்த
செயற்பாடுகள் அல்லது புலப்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது. அத்துடன்
அதிகரித்த கொழுப்புப் படிதல் போன்ற உடற்கூற்றியல்
மாற்றங்களும் ஏற்படுகின்றன. கூட்டிலடைத்து வளர்க்கப்படும் பறவைகளும்,
பகல்நேரம் சுருங்குதல், வெப்பநிலை குறைதல் போன்ற எவ்வித சூழல் சார்ந்த
குறிகள் எதுவும் இல்லாமலேயே, பறவைகளுக்கிடையில் புலப்பெயர்வு அமைதியின்மையை
தோற்றுவிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, பறவைகளில் புலப்பெயர்வைக்
கட்டுப்படுத்துவதில் உள்ளுணர்வு சார்ந்த நிரலாக்கம் (endogenic
programming) செயற்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. கூண்டிலடைத்து
வளர்க்கப்பட்ட பறவைகளும், பறக்கவிடும்போது, இயற்கையில் இவ்வினப் பறவைகள்
புலப்பெயர்வின்போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்வது தெரிய
வந்துள்ளது. அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும்
பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும்
நிகழ்வதும் அறியப்பட்டுள்ளது.
வலசை போகும் பிற உயிரினங்கள்
வெட்டுக்கிளி
பாலைவன வெட்டுக்கிளிப்
பூச்சிகள் பெருந்திரள் கூட்டமாக இடம்பெயரும் போது ஒரு நாளைக்கு 3000
டன்கள் தாவரங்களை உண்ணுகின்றன. ஒரு பெருந்திரள் கூட்டத்தில் சுமார் 50,000
மில்லியன் வரை பூச்சிகள் இருக்கும்.
கடல் வாழிகள்
கடலில் வாழக்கூடிய மீன்கள், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம்
ஆகியவையும் வலசை போகின்றன. சால்மன் மீன்கள் என்ற மீன்கள்
இனப்பெருக்கத்திற்காக கடலிலிருந்து நன்னீரை நோக்கி 1500 மைல்கள்
(2400கி.மீ) வரை பயணிக்கின்றன. இவ்வாறு நீண்ட தூரப் பயணத்தில் முற்றிலும்
ஆற்றலிழந்த நிலையில் இனப்பெருக்கத்திற்குப் பின் பல மீன்கள் இறந்து
விடுகின்றன.
ஆமைகள்
ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக நீண்ட தூரம் வலசை போகின்றன. குறிப்பாக பிரேசில் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக எட்டு வாரஙகளில் 1250 மைல்கள் (2000கி.மீ) பயணிக்கின்றன.
மான்கள்
வட அமெரிக்காவிலுள்ள பாரன் மைதான மான்கள் 3700 மைல்களுக்கும் (5000கி.மீ) மேலாகப் பயணிக்கின்றன. இதுவே பாலூட்டிகளில் அதிக தூரம் நடைபெறும் வருடாந்திர வலசை போதலாகும்.
வலசை போதல் பற்றிய ஆய்வுகள்
கிரேக்க மேதை அரிஸ்டாட்டில்
2000 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பருவ கால இடப்பெயர்வைக்
கண்டறிந்தார். கி.மு. 384-322-இல் எழுதிய 'விலங்குகளின் வரலாறு' என்ற
நூலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன. இவற்றிற்கென தனிப் படிப்புகளும் உள்ளன. முனைவர் சலீம் அலி
(1896-1987) என்பவர் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த பறவை
நிபுணர் ஆவார். இவரின் ஆய்வுகள் மூலம் பறவைகள் பற்றிய பல்வேறு சுவையான
தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
பறவைகள் தங்களது இடம்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன எனப் புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு சிலரின் ஆய்வுப்படி பறவைகளின் இடப்பெயர்வு வடக்கு, தெற்கு திசையில் அமைகின்றது. ரஷ்யாவில் உள்ள ரிபாஷி என்னுமிடத்தில் உள்ள உயிரியல் மையத்தின் ஆய்வாளர் நிகிதா சென்ஸ்டவ் வசந்த காலத்தில் பறவைகள் நெடுந்தொலைவு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் சென்று திரும்பும்போது கிழக்கு மேற்காக இடம்பெயர்கின்றன என்று தன் ஆய்வில்
கூறியுள்ளார். இதிலிருந்து பறவைகள் எவ்வாறு அட்ச ரேகைகளைக் கண்டறிகின்றன
என்பது தெரியவில்லை. ஆனால் தீர்க்க ரேகை என்பது வடக்கு தெற்கு திசைகளில்
செல்கிறது. இதை நடுப்பகலில் உள்ள சூரியனின் இருப்பிடத்தை வைத்தோ அல்லது
பூமியின் காந்தப்புலத்தை வைத்தோ எளிதில் கண்டறியலாம் என்று சென்ஸ்டவ்
விளக்கியுள்ளார்.
மூன்றாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரத்தின்
அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில்
தீர்க்கரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான
ஆதாரங்கள் இல்லை.
பறவைகள் பட்டியல்
அ
ஆ
இ
உ
எ
க
- கபில மார்புப் பூங்குயில்
- கபில வயிற்றுப் பூங்குயில்
- கருவயிற்றுப் பூங்குயில்
- கழுகு
- கறுப்பு அன்னம்
- காகம்
- காட்டுக்கோழி
- காடை
- கிளி
- கிவி
- குருட்டுக் கொக்கு (Ardeola grayii)[2]
- குருவி
- குயில்
- கூழைக்கடா
- கொக்கு
- கொண்டைக்குருவி (Bulbul)[3]
- கொண்டைப் பூங்குயில்
- கோழி
- கருவாலி(கெளதாரி)
ச
- சருகுக் கோழி
- சாம்பல் நாரை (Ardea cinerea) [2]
- சிட்டுக் குருவி
- சிறுகீற்றுப் பூங்குயில்
- செஞ்சொண்டுப் பூங்குயில்
- செதிலிறகுப் பூங்குயில்
- செம்பகம்
- செம்பருந்து
- செம்முகப் பூங்குயில்
- செந்நாரை (Ardea purpurea)[2]
- செங்கால் நாரை
- செம்பகம்
ம
- மஞ்சட் சொண்டுப் பூங்குயில்
- மயில்
- மரக்கொத்தி
- முக்குளிப்பான் (Tachybaptus ruficollis)[2]
- மைனா
- மீன்கொத்தி
ப
- பசுஞ் சொண்டுப் பூங்குயில்
- பருந்து
- பாம்புத்தாரா (Anhinga melanogaster) [2]
- புறா
- பூங்குருவி (thrush)[3]
- பூநாரை
வ
ந
- நாரை
- நீர்க்காகம்(Phalacrocorax fuscicollis)[2]
- நீல முகப் பூங்குயில்
- நெற்குருவி
த
அழிந்த பறவைகள்
கி. பி. 1500 க்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமான பறவை
இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவுவீதமும் அதிகரித்துச்
செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம்
இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழிவாபத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த
அழிவாபத்து மிகப் பெரும்பாலும் மனிதனாலேயே ஆகும். தீவுகளில் வாழும் குறிப்பாகப் பறக்கவியலாத பறவையினங்களே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன.
அழிந்த பறவைகளின் பட்டியல்
டோடோ - ஒரு அழிந்த பறவை
நன்றி-விக்கிப்பீடியா
No comments:
Post a Comment