-->
தங்களின் மேலான கருத்துகளையும், பகிர்ந்து கொள்ள விரும்பும் முக்கியத் தகவல்களையும் pumsetp@gmail.com என்ற மின்னஞ்சல்(E-Mail) முகவரிக்கு அனுப்புங்கள்....

Sunday, 29 July 2012

>திருக்குறள்

இயற்றிவர்: திருவள்ளுவர்.

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்.

>>>திருக்குறள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... [PDF]

133 அதிகாரங்கள்

அதிகார அகவரிசை



பாயிரவியல்
கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன்வலியுறுத்தல்
இல்லறவியல்
இல்வாழ்க்கை
வாழ்க்கைத் துணைநலம்
புதல்வரைப் பெறுதல்
அன்புடைமை
விருந்தோம்பல்
இனியவைகூறல்
செய்ந்நன்றி அறிதல்
நடுவு நிலைமை
அடக்கமுடைமை
ஒழுக்கமுடைமை
பிறனில் விழையாமை
பொறையுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
பயனில சொல்லாமை
தீவினையச்சம்
ஒப்புரவறிதல்
ஈகை
புகழ்
துறவறவியல்
அருளுடைமை
புலான்மறுத்தல்
தவம்
கூடாவொழுக்கம்
கள்ளாமை
வாய்மை
வெகுளாமை
இன்னாசெய்யாமை
கொல்லாமை
நிலையாமை
துறவு
மெய்யுணர்தல்
அவாவறுத்தல்
ஊழியல்
ஊழ்

அரசியல்
இறைமாட்சி
கல்வி
கல்லாமை
கேள்வி
அறிவுடைமை
குற்றங்கடிதல்
பெரியாரைத் துணைக்கோடல்
சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை
வலியறிதல்
காலமறிதல்
இடனறிதல்
தெரிந்துதெளிதல்
தெரிந்துவினையாடல்
சுற்றந்தழால்
பொச்சாவாமை
செங்கோன்மை
கொடுங்கோன்மை
வெருவந்தசெய்யாமை
கண்ணோட்டம்
ஒற்றாடல்
ஊக்கமுடைமை
மடியின்மை
ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை
அமைச்சியல்
அமைச்சு
சொல்வன்மை
வினைத்தூய்மை
வினைத்திட்பம்
வினைசெயல்வகை
தூது
மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல்
அவையறிதல்
அவையஞ்சாமை
அரணியல்
நாடு
அரண்
கூழியல்
பொருள்செயல்வகை
படையில்
படைமாட்சி
படைச்செருக்கு
நட்பியல்
நட்பு
நட்பாராய்தல்
பழைமை
தீ நட்பு
கூடாநட்பு
பேதைமை
புல்லறிவாண்மை
இகல்
பகைமாட்சி
பகைத்திறந்தெரிதல்
உட்பகை
பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல்
வரைவின்மகளிர்
கள்ளுண்ணாமை
சூது
மருந்து
குடியியல்
குடிமை
மானம்
பெருமை
சான்றாண்மை
பண்புடைமை
நன்றியில்செல்வம்
நாணுடைமை
குடிசெயல்வகை
உழவு
நல்குரவு
இரவு
இரவச்சம்
கயமை

களவியல்
தகையணங்குறுத்தல்
குறிப்பறிதல்
புணர்ச்சிமகிழ்தல்
நலம்புனைந்துரைத்தல்
காதற்சிறப்புரைத்தல்
நாணுத்துறவுரைத்தல்
அலரறிவுறுத்தல்
கற்பியல்
பிரிவாற்றாமை
படர்மெலிந்திரங்கல்
கண்விதுப்பழிதல்
பசப்புறுபருவரல்
தனிப்படர்மிகுதி
நினைந்தவர்புலம்பல்
கனவுநிலையுரைத்தல்
பொழுதுகண்டிரங்கல்
உறுப்புநலனழிதல்
நெஞ்சொடுகிளத்தல்
நிறையழிதல்
அவர்வயின்விதும்பல்
குறிப்பறிவுறுத்தல்
புணர்ச்சிவிதும்பல்
நெஞ்சொடுபுலத்தல்
புலவி
புலவி நுணுக்கம்
ஊடலுவகை

No comments:

Post a Comment